பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
ஈரோடு: ஈரோடு கோட்டை, பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நவக்கிரஹ ஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை, 10 மணிக்கு, அம்பிகையிடம் உத்தரவு பெறுதல் நடந்தது. 10.30க்கு விக்னேஸ்வரர் பூஜை, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை, 5 மணிக்கு மங்களஇசை, விக்னேஸ்வரபூஜை, புண்ணியாக வாஜனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் நடந்தது.இன்று காலை, 8 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மங்களஇசை, விஷேச சந்தி, பூதசுத்தி, கோபுரகலசங்கள் வைத்து பூஜித்தல், திரவ்யாகுதி நடக்கிறது.நாளை காலை, 8 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, விநாயகர், பாலமுருகன், நவக்கிரஹங்கள், ஓங்காளியம்மன் பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.மாலை, 5 மணிக்கு ஐந்தாம் கால ஹோம பூஜை, விநாயகர் வழிபாடு, வேதபாராயணம், தத்வஅர்ச்சனை, ஐந்தாம்கால ஹோமபூஜை, தீபாராதனை நடக்கிறது. வரும், 29ம் தேதி கும்பாபிஷேக விழாவன்று, அதிகாலை, 5 மணிக்கு, ஆறாம் கால யாகபூஜை ஆரம்பம், விநாயகர் வழிபாடு, நாடிசந்தனம், ஸ்பர்ஷாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, 6 மணி முதல் 7.30க்குள், கோபுரகலசம், ஓங்காளியம்மன், பரிவார தெய்வங்களுக்கும், மஹா கும்பாபிஷேகம், அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. கோட்டை ஓங்காளியம்மன் கோவில் கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவஞானம், பொருளாளர் மலர்அங்கமுத்து, சம்பத்குமார்,குப்புராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.