அருணாசலேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் சீரமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2022 05:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி கோயிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள வெள்ளி ரதத்தை கோவில் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, மாட வீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஊழியர்கள் சீரமைத்தனர்.