பழநி: பழநி மலைக்கோயில் சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை இன்று மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. பழநி முருகன் மலைக்கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்ல முடியும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்றதால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணி காரணமாக முன்னறிவிப்பு இல்லாமல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் ரோப்காரில் செல்ல எதிர்பார்ப்புடன் வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.