Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குண்டும் குழியுமான மருதமலை ... மணவாள மாமுனிகள் அவதார தினவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மிளகனூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2022
04:11

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள மிளகனுர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மானாமதுரை அருகே உள்ள மிளகனூரில் வரசித்தி விநாயகர் கோவிலில் ஒரு பழமையான சிற்பம் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் அங்கு சென்று கள ஆய்வு செய்த போது அந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் என்று தெரியவந்தது.இந்த சிற்பம் குறித்து அவர்கள் கூறுகையில்,

இந்த சிற்பம் இரண்டரை அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது, சிற்பமானது 4 கரங்களுடனும் அதில் வலது பின் கரத்தில் மழுவும்,இடது பின் கரத்தில் பாசம் என்ற ஆயுதத்தையும், (பாசம் என்கிற ஆயுதம் விநாயகரின் தாய் பார்வதி தேவியின் ஆயுதமாகும் இந்த ஆயுதத்தை தன் மகன் விநாயகருக்கு தந்தருளியதாக ஐதீகம்) வலது முன் கரத்தில் அபய முத்திரையுடனும், இடது முன்கரத்தில் மோதகத்தை பிடித்த படியும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம் தரித்தும் அகன்ற இரண்டு காதுகளுடன் அழகாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.வயிற்றுப் பகுதி வரை நீண்ட துதிக்கையும் இரண்டு கொம்புகளுடனும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 கரங்களிலும் ஆபரண அணிகலன்கள் அணிந்தபடியும் 2 கால்களிலும் வீரக்கழலை அணிந்தபடியும் அமர்ந்த கோலத்தில் முற்கால பாண்டியருக்கே உரித்தான கைவண்ணத்தில் இந்த சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.இந்த சிற்பத்தினை பார்க்கும் போது மிளகனூரில் முற்கால பாண்டியரின் சிவன் கோவில் இங்கு இருந்திருக்க வேண்டும் என்றும் கால ஓட்டத்தில் கோவில் அழிந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar