மணிப்பூர் கவர்னர் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2022 06:11
மயிலாடுதுறை: சீர்காழி கிளை மடத்தில் பன்னிரு திருமுறை மறுபதிப்பு பணியை தொடங்கி வைத்த மணிப்பூர் கவர்னர் தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோவில் அருகே உள்ள தருமபுரம் ஆதீன கிளை மடத்திற்கு இன்று மதியம் மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவரை சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து இல.கணேசன், அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி கிளை மடத்தில் தங்கி கோவில் திருப்பணிகளை கண்காணித்து வரும் தருமபுரம் ஆதீன 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அப்போது கவர்னர் இல.கணேசனுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறு பதிப்பு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள், வைத்தீஸ்வரன் கோவில் சுவாமிநாதன், சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து கவர்னர் இல.கணேசன் தேவார பாடசாலை மாணவர்கள் மற்றும் கோவில் சிற்பந்திகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.