பழநியில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நவ.,8ல் கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2022 10:11
பழநி: பழநி மலைக்கோயிலில் நவ.,8, சந்திர கிரகணத்தன்று மதியம் 2:30 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநியில் நவ.,8 அன்று சந்திர கிரகணம் மாலை 5:47 மணிக்கு துவங்கி மாலை 6:26 மணி வரை நடைபெற உள்ளது. பழநி மலைக்கோயிலில் மதியம்12:00 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறும். மதியம் 2:30 மணிக்கு பழநி மலைக்கோயில், அனைத்து சன்னதிகளும் நடை அடைக்கப்படும். அதன்பின் சந்திர கிரகணம் முடிவுற்று மாலை 7:00 மணிக்கு மேல் சம்ரோக்சன பூஜையும், தொடர்ந்து சாயரட்சை பூஜையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெறும். சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 11:30 மணிக்கு மேல் படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஆகியவற்றில் மலைக்கோயில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இரவு 7:00 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.