முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி குதிரை எடுப்புவிழா நடந்தது.இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். புளியங்குடி கிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரைகள், காளைகள் உட்பட 150க்கும் மேற்பட்ட தவளும் பிள்ளைகள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக தூக்கி வந்த பின்பு கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்புபூஜைகள் நடந்தது. கூத்தபெருமாள் அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.