தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2022 05:11
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே எலகம்பாளையத்தில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத கிருத்திகை விழா விமர்சையாக நடந்தது. காலையில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து அலங்கார பூஜையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பகத்தூர் முப்பெரும் தேவியர் பஜனை குழு சார்பில், பஜனை பாடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.