பழநியில் ஐப்பசி கார்த்திகை: தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2022 07:11
பழநி: பழநியில் ஐப்பசி மாத கார்த்திகை, நேற்று தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
பழநி மலைக்கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினார். திருவிளக்கு பூஜை மலைக்கோயிலில் நடைபெற்றது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி மி தரிசனம் செய்தனர்.