Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி ... கூமாபட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கூமாபட்டி முத்தாலம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு தங்கும் வசதி : கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
எழுத்தின் அளவு:
சபரிமலை பக்தர்களுக்கு தங்கும் வசதி : கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பதிவு செய்த நாள்

10 நவ
2022
07:11

கொச்சி, :மண்டல - மகர விளக்கு பூஜையின் போது சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழியில் உள்ள கோவில்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை, திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

அறிக்கை: இங்கு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல மகர விளக்கு பூஜை காலம் வரும் 17ல் துவங்குகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவது வழக்கம். சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், வரும் வழியில், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாறிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த இடங்கள் எடத்தவலம் என அழைக்கப்படுகின்றன.

சபரிமலை வரும் பக்தர்களுக்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் 52 எடத்தவலங்கள் உள்ளன. கொச்சி தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் இரண்டு எடத்தவலங்கள் உள்ளன. இங்கு, பக்தர்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, சபரிமலை அய்யப்பன் கோவிலின் சிறப்பு கமிஷனர், கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில், நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உறுதி: இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மண்டல - மகர விளக்கு பூஜையின் போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வழியில் உள்ள எடத்தவலங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை, திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும். அனைத்து எடத்தவலங்களிலும் தேவசம் போர்டு உதவி கமிஷனர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar