பதிவு செய்த நாள்
28
ஆக
2012
10:08
சேலம்: கருப்பூர், கரும்பாலை வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது. நேற்று காலை 6 மணிக்கு மேல் மகா ÷ஷாடச கணபதி ஹோமம், கோபூஜையுடன் விழா துவங்கியது. மாலை 6 மணியளவில் விநாயகர் வழிபாடு, புஷ்பயாகம், முதற்கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில், விநாயகர் வழிபாட்டுடன் இரண்டாம் கால யாகபூஜை, மூலமந்திர ஹோமம், அபிஷேகம் கண்திறப்பு நிகழ்ச்சியும், மாலை 6 மணியளவில் மங்கள இசையுடன் மூன்றாம் காலயாக பூஜை, மூலிகை ஹோமம், திரவிய ஹோமம், ஹோம யாகபூஜை வழிபாடுகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் வித்யாகணபதி பிரதிஷ்டை செய்து,மூன்றாம் காலயாக பூஜை நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு, மேல் நான்காம் காலயாக பூஜை, யாக வேள்வி, திருமுறை பாராயணம், மங்கள இசை நிகழ்ச்சியை தொடர்ந்து, காலை 9.15 மணியளவில் கோபுர மகா கும்பாபிஷேக விழாவும், 9.30 மணிக்கு வித்யகணபதிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை 9.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு தீபதரிசனம் முடிந்ததும், கோபூஜை செய்து, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எஸ்.ஆர்.எம்., நர்சரி, பிரைமரி பள்ளி சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.