பதிவு செய்த நாள்
11
நவ
2022
05:11
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.18 லட்சம் உண்டியல் மூலம் வசூலாகி உள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் க0ோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 9 நிரந்தர உண்டியல்கள் , 7 குடங்கள் ஆகியன நேற்று குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம் , பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண ் கா ணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில், ரூ.17 லட்சத்து 68 ஆயிரத்து 994 ரொக்கமாகவும், 70 கிராம் தங்கம், 301 கிராம் வெள்ளி மற்றும் சவுதி அரேபியாரியால் 20, சிங்கப்பூர் டாலர் 50, கத்தார் ரியால் 1, ஓமன் ரியால் 2 ஆகிய வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.