Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துலாபுரம் கோயிலில் ... 1,100 ஆண்டுகள் பழமையான ஜேஷ்டாதேவி சிற்பம், சிவலிங்கம் மீட்பு 1,100 ஆண்டுகள் பழமையான ஜேஷ்டாதேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த பாதுகா மஹாஸமாராதனா நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த பாதுகா மஹாஸமாராதனா நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

15 நவ
2022
11:11

பேரூர்: தெலுங்குபாளையத்தில், ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த பாதுகா மஹாஸமாராதனா நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ ஸத்யாத்ம சேவா ஸமிதி சார்பில், ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த பாதுகா மஹாஸமாராதனா நிகழ்ச்சி தெலுங்குபாளையத்தில் நடந்தது. உத்திராதி மடத்தின் 42வது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த ஸ்ரீ பாதங்கள், ஆண்டுதோறும் தனது குருவான, 41வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த ஸ்ரீ பாதங்களில், பாதுகையை வைத்து ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் பூஜை செய்து வருகிறார்.

கோவையில், கடந்த, 12ம் தேதி துவங்கிய நிகழ்ச்சி மூன்று நாட்களாக நடந்து வந்த நிலையில், நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, உத்திராதி மடத்தின் 42வதுபீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த ஸ்ரீ பாதங்கள் தலைமை வகித்து, ஸ்ரீ மூல ராமச்சந்திரர், மூல சீதா தேவியர், திக் விஜயராமர், வித்யவியாசர் ஆகியோரின் கிரீடங்களுக்கு பூஜை செய்தார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஸ்ரீமன் ந்யாய ஸுதா மண்டனம் கிரந்தம் படித்த, 25 பண்டிதர்களுக்கு, 4 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கினார். இதில், இலவச மருத்துவ முகாம், வேதப்பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. 42வதுபீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த ஸ்ரீ பாதங்களின், 50 வது ஆண்டு விழாவையொட்டி, 50 ஹோமங்கள் வளர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 50 புண்ணிய நதிநீரை கொண்டு,41வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யப்ரமோத தீர்த ஸ்ரீ பாதங்களுக்கும் மற்றும் 42வது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த ஸ்ரீ பாதங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று, ராமர் பீடத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பண்டிதர்களின் உபன்யாசம் மற்றும் மகளிருக்கான சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நரசிம்மா ஆச்சார் மற்றும் கோவை ஸ்ரீ ஸத்யாத்ம சேவா ஸமிதி குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar