Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரும் 20ம் தேதி வீரபத்திர சுவாமி ... பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் செயற்கைகோள் மூலம் அளவீடு பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தக்கரை மகா கணபதி கோவிலில் தேர் திருவிழா கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
மந்தக்கரை மகா கணபதி கோவிலில் தேர் திருவிழா கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

15 நவ
2022
06:11

பாலக்காடு: பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி மாந்தக்கரை மகா கணபதி கோவிலின் தேரோட்டம் விமர்சையாக நடந்தது.

திருவிழாவின் முதல் நாளில் அலங்கரிக்கப்பட்ட தேரில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சுவாமி, கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் எழுந்தருளி உலா வந்தனர். இரண்டாம் திருநாளான இன்று மந்தகரை மகா கணபதி கோவில் தேரோட்டம், செண்டை மேளம் முழங்க காலை 11:25 மணி அளவில் நடந்தது. "மகா கணபதிக்கு ஜெய், வீர கணபதிக்கு ஜெய்" என்று கோஷத்துடன் பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக கோவிலில் காலை 6:00 மணிக்கு ருத்ராபிஷேகம், 9:00 மணிக்கு வேதபாராயண நிறைவு, ஆசீர்வாதம் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இன்று பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில்களில், தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக நேற்று சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் புதிதாக வெள்ளியின் தயார் செய்த ஆறரை அடி உயரமுள்ள குதிரை வாகனத்தில் உற்சவர் எழுந்தருளும் வைபவவும் நடந்தது. நாளை மாலை 6:00 மணியளவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள தேர்முட்டியில் ரதோற்சவத்தின் சிறப்பு அம்சமான ஆறு தேர்தளின் சங்கமம் நடக்கிறது. இதையடுத்து இன்று கல்பாத்தி அக்ரஹார வீதி உட்பட சுற்றுவட்டாரங்களில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு பாலக்காடு நகர டி.எஸ்.பி.,யின் தலைமையில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளான. கேமரா மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளனது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar