பதிவு செய்த நாள்
23
நவ
2022
04:11
மேட்டுப்பாளையம்: குண்டத்து காளியா தேவி கோவிலில், அமாவாசை பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையம் காளியாதேவிபுரத்தில் குண்டத்து காலியாதேவி கோவில் உள்ளது. கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், கங்கை அம்மன், முருகர், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு முதலில் பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து குண்டத்து காளியா தேவி அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் இணைந்து, பூஜைகள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.