அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அமாவாசையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கார்த்திகை மாத அமாவாசையான இன்று அன்னூர், ஓதிமலை ரோட்டில் உள்ள பழமையான பெரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதி, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சின்னம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் உட்பட அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.