கருமத்தம்பட்டி: கார்த்திகை அமாவாசையை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கார்த்திகை மாத அமாவாசையை ஒட்டி, செம்மாண்டாம்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து அலங்கார பூஜையில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. இதேபோல், சூலூர் சிவன் கோவில், பெருமாள் கோவில், மேற்கு அங்காளம்மன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், புதூர் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசை பூஜை வெகு சிறப்பாக நடந்தது.