ஸ்ரீபெரும்புதுார்: மணிமங்கலத்தில் செல்லியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குன்றத்துார் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகே உள்ள குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில், இந்த குளம் பராமரிப்பின்றி ஆகாய தாமரை செடிகள் வளர்ந்தும், பாசி படர்ந்தும் குளத்தில் நீர் இருப்பதே தெரியாத அளவில் உள்ளது. இதனால், காற்று, சூரிய ஒளி குளம் தண்ணீரில் படாததால் குளத்தில் உள்ள மீன்கள் இறக்கின்றன. ஆகாய தாமரை செடிகளை அகற்றி குளத்தை துார் வாரி பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.