Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசியலை கடந்த கலாசார பிணைப்பின் ... பரமக்குடியில் சம்பக சஷ்டி விழா பரமக்குடியில் சம்பக சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

27 நவ
2022
07:11

திருப்பதி, திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று, 24 மணிநேரம் காத்திருந்தனர்.

திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை நிலவரப்படி, 24 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்துஇருந்தனர். எனவே, இலவச தரிசன டோக்கன் பெறாதவர்களின் தர்ம தரிசனத்திற்கு 24 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு மூன்று முதல் நான்கு மணிநேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு மூன்று முதல் நான்கு மணிநேரமும் தேவைப்பட்டன. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 157 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 31 ஆயிரத்து 445 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில், பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்களில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. அலிபிரி நடைபாதையில் காலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar