பதிவு செய்த நாள்
28
நவ
2022
01:11
ஆலாந்துறை: ஆலாந்துறையில் உள்ள சித்தி விநாயகர், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
ஆலாந்துறை, சிறுவாணி மெயின் ரோட்டில், சித்தி விநாயகர், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த, 25ம் தேதி தீர்த்தக்குடம் எடுத்தலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, முளைப்பாலிகை ஊர்வலமும், மாலை, 5:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, இறை அனுமதி பெறுதல், திருமகள் வழிபாடு நடந்தது. மாலை, 7:00 மணிக்கு, முதற்கால வேள்வி நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியும், காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. காலை, 8:30 மணிக்கு, பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளையின் தலைவர் லட்சுமிபதி ராசு தலைமையில், விமான கோபுரத்திற்கும், சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீதேவி கருமாரியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.