பதிவு செய்த நாள்
29
நவ
2022
08:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
சில பக்தர்கள், மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தேர், கேடயம் போன்ற சேவைகள் கட்டணம் செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
மேற்கண்ட அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள், 2020ல், மார்ச் மாதம் வரை ஆன்-லைன் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அனைத்து சேவைகள், அபிஷேகம் கடந்தாண்டு வரை ரத்து செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அரசு வழிகாட்டுதலுடன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல், மீண்டும் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற இரு முறை திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது. இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, கோவில் நிர்வாகம் நேற்று முதல், மீண்டும் ஆன்-லைன் வாயிலாக அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பக்தர்கள் https://tiruttanigaimurugan,hrce.gov.in என்ற இணைதளம் வாயிலாக மேற்கண்ட டிக்கெட்பெற்றுக் கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
க்யூஆர் கோடு: முருகன், கோவில் நிர்வாகம் க்யூஆர்கோடு ஸ்கேன் வாயிலாக நன்கொடை, காணிக்கைகள் செலுத்துவதற்கு மலைக்கோவிலில், தேர்வீதியில் நான்கு இடங்களில் க்யூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளன.இனி, பக்தர்கள் பணமாக இல்லாமல் மொபைல் போன் வாயிலாக க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து காணிக்கைகள். நன்கொடைகள் செலுத்தலாம்.