மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், 9:00 மணிக்கு யாக சாலை பூஜையும் நடந்தது. 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனைக்குப்பின், மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலயசுவாமிகள் செய்திருந்தார்.