முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள பைரவருக்கு 11 ஆம் ஆண்டு சம்பக சஷ்டி காலபைரவ யாக விழா நடந்தது.காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,கும்பபூஜை,அஷ்ட பைரவர் யாகம், மகா பூர்ணாஹீதி சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்பு பைரவர் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.