பதிவு செய்த நாள்
01
டிச
2022
11:12
தக்கலை: கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களுக்கும் சாந்தி, சமாதானம் மற்றும் உலக நன்மைக்காக வேண்டி பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி ஆனந்தேஸ்வரபட் தலைமையில் மகாகணபதி ஹோமம், மகா சண்டிகாஹோமம், நவக்கிரக ஹோமம், வைஷ்ணவி சாந்தி பூஜை ஹோமம் ஆகியவை நடந்தன. இந்த பூஜையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகர் கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி, மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் ரமேஷ், தொழில் பிரிவு செயலாளர் மணி, மாநில குழு உறுப்பினர் கோபகுமார், வழக்கறிஞர் வேலுதாஸ், தொழிலதிபர் விஜி மற்றும் ஆலய நிர்வாகிகள், ஊர்மக்கள் கலந்து கொண்டனர். சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் மேல் சாந்தி கமுக்கரை சதீஷ் போற்றி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.