கோவில் புகைப்படத்துடன் வழிகாட்டி பலகை பக்தர்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2022 01:12
தியாகதுருகம்: பிரசித்தி பெற்ற கோவிலுக்கு புகைப்படத்துடன் கூடிய வழிகாட்டிப் பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில், பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில், ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் உள்பட பல கோவில்கள் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. பழமையான இக்கோவில்களுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகளில் இருந்து இக்கோயில்களுக்கு செல்லும் வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர். அதில் அக்கோவிலின் புகைப்படத்துடன் எத்தனை கி.மீ., தூரம் மற்றும் கோயிலில் உள்ள சுவாமியின் பெயர், ஊரின் பெயர் ஆகிய தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும்படி 8 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்டதாக பெயர் பலகை பெரிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள் சிரமம் இன்றி கோயிலுக்கு செல்ல இப் பெயர் பலகை வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ள இடத்திற்கு வழிகாட்டும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ள பெயர் பலகை பக்தர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.