திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சம்பத்கிரி மலைமேல் சுயம்பு லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. உக்ர மூர்த்தியான இவர் இரண்யவதம் முடிந்து, அதே உக்ரத்தோடு இங்கு எழுந்தருளியதாக ஐதிகம். அவரை சாந்தப்படுத்த லட்சுமியும் உடன் எழுந்தருளினாராம். மிகவும் வரப்பிரசாதியான இவரிடம் வைக்கும் பிரார்த்தனை எல்லாமே ஜெயம்தான்!