மனிதர்கள் இடையே ஏதாவது ஒரு விஷயத்தில் பிரச்னை ஏற்படுவது வழக்கம். அதில் ஒருவர் கோபமாக பேசுகிறார் என்றால், பதிலுக்கு பதில் பேசக்கூடாது. ஏனெனில் கோபமான வார்த்தைகள் சிறிய பிரச்னையைக்கூட பெரிதாக மாற்றிவிடும். அதுமட்டும் இல்லாமல் தேவையில்லாத பதட்டமும் தொற்றிக்கொள்ளும். சரி. இதற்கு தீர்வுதான் என்ன? அமைதி. ஆம்! அந்த நேரத்தில் அமைதியாக இருந்தால் மனம் லேசாகும்.