* அதிகாலையில் எழு. வாழ்க்கையில் முன்னேறுவாய். * கடவுளிடம் சரணாகதி அடைந்தால் உன்னுடைய பாவம் தீரும். * இன்பம், துன்பத்தை சமமாக எடுத்துக்கொள். * நீ செய்த பாவ, புண்ணியம் மட்டுமே உன்னுடைய சொத்து. * காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நல்லதை உடனே செய். * கடவுளின் மகிமையை கூறும் புத்தகங்களை தினமும் படி. * இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய். * நீ செய்து முடிக்கும் ஒவ்வொரு செயலும், உனது புண்ணியத்தால் கிடைத்தவை. * என்னதான் நீ முயற்சிச்சித்தாலும், கிடைக்கவேண்டியதுதான் உனக்கு கிடைக்கும். * ‘சிவாயநம’ என சொல்வோருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை. * நல்லவர்கள் வறுமையிலும் தனது நேர்மையை கைவிடுவதில்லை. * உலக நடைமுறைக்கு ஏற்ப செயல்படு. * உன்னிடம் பணம் இருந்தாலும் அதை அனுபவிக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். * உன்னுடைய துன்பத்திற்கு காரணம் நீயே. * கல்வி மட்டுமே அழியாத செல்வம். * ஆசிரியரை மதிக்காதவனின் அறிவு பயன்படாது. * யாரிடமும் வீணாக சண்டையிடாதே. * நல்ல உணவுக்காக காத்திருக்கும் கொக்கு போல, வாய்ப்புக்காக காத்திருப்பவனே அறிவாளி. * பிற உயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும். * தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மையைத் தரும்.