மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2022 11:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கார்த்திகை உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற உள்ள திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு டிச., 6ல் லட்ச தீபங்கள் ஏற்றப்படவுள்ளன. இக்கோவிலில் திருக்கார்த்திகை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச.,10 வரை நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகளுடன் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் ஆடி வீதியில் உலா வருவர். டிச., 6ல் கோவிலில் லட்ச தீபங்கள் ஏற்றப்படும். அன்று இரவு 7:00 மணிக்குள் அம்மனும், சுவாமியும் கீழ மாசி வீதி தேரடி அருகில் நடக்கும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளுவர். ஏற்பாடுகளை, தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் துணை கமிஷனர் அருணாசலம் செய்கின்றனர்.