Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணி தேவாலய திருவிழா ... திருத்தணி முருகனை தரிசிக்க இரண்டரை மணி நேரம் காத்திருப்பு! திருத்தணி முருகனை தரிசிக்க இரண்டரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகையை ஒட்டி குருவாயூரில் குவிந்தன வாழைக்குலைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2012
10:08

குருவாயூர்: ஓணம் பண்டிகையை ஒட்டி, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, ஒரு மணி நேரத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட நேந்திர வாழைக் குலைகளை சுவாமிக்கு பக்தர்கள் அர்ப்பணித்தனர். இதைக் கொண்டு, நேற்று பக்தர்களுக்குப் பழப்பிரதமன் பாயாசம் விருந்துடன் பரிமாறப்பட்டது. கேரளா, திருச்சூர் மாவட்டம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி, பக்தர்கள் நேந்திர வாழைக் குலைகளை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு, இவ்வாண்டுக்கான பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் காலை சீவேலி (யானையில் உற்சவ மூர்த்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி)க்குப் பின், பக்தர்களிடம் இருந்து வாழைக் குலைகள் பெறும் நிகழ்ச்சி துவங்கியது. காலையில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கொண்டு வந்த நேந்திர வாழைக் குலைகளை, கோவில் கொடிமரம் அருகே, காணிக்கையாக பெறப்பட்டது. நிகழ்ச்சியில், முதலில் பெறப்பட்ட வாழைக் குலை சுவாமிக்கு படைக்கப்பட்டது. இவ்வாறு, நிகழ்ச்சி துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே, ஐநூறுக்கும் மேற்பட்ட வாழைக் குலைகள் கோவிலில் குவிந்தன. தொடர்ந்து, இரவு நடை அடைக்கும் வரையிலும், வாழைக் குலைகளை பக்தர்கள் அர்ப்பணித்தவண்ணம் இருந்தனர். இவ்வாறு கிடைக்கப் பெற்ற வாழைக் குலைகளில் ஒரு பகுதி, நேற்று காலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட, 22 யானைகளுக்கும், ஒரு பகுதி புன்னத்தூர் கோட்டையில் பராமரிக்கப்படும் யானைகளுக்கும் வழங்கப்பட்டது. மேலும் ஒரு பகுதி வாழைப் பழங்கள், நேற்று பக்தர்களுக்கு குருவாயூர் தேவஸ்வம் போர்டு சார்பில் வழங்கப்பட்ட ஓண விருந்தின்போது, பரிமாறப்பட்ட பழப்பிரதமன் பாயாசத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள வாழைக் குலைகள் பொதுமக்களுக்கு ஏலம் விடப்பட்டன. இவ்வாறு ஏலம் விடப்பட்டதில், 1.50 லட்சம் ரூபாய் குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு கிடைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar