Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வித்ய கணபதி கோவில் மகா கும்பாபிஷேக ... கொட்டும் மழையில் வசந்தகால திருவோண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.95 லட்சத்தை தாண்டியது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2012
10:08

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ 95 லட்சத்தை தாண்டியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாதம் இருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படும். இதேபோன்று ஆகஸ்டு மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு உள்ளது. அதன்படி முதல் உண்டியல் திறப்பு கடந்த 14ந் தேதி திறந்து எண்ணப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், இணைஆணையர் சுதர்சன், முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்த பணியில் தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா, ஆய்வர் முருகானந்தம், தலைமை க ணக்கர் பட்டுராஜா, பொதுமக்கள் பிரதிநிதிக ள் சுப்பிரமணியன், வேலாண்டி, அகிலன், மோகன், மற்றும் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். முதல் உண்டியலில் ரூ. 49 லட்சத்து 31 ஆயிரத்து 634 இருந்தது. 505 கிராம் தங்கமும், 3,320 கிராம் வெள்ளியும் இருந்தது. 2-வது முறையாக திறந்து எண்ணப்பட்ட கோவில் உண்டியலில் 40 லட்சத்து 68 ஆயிரத்து 831 ரூபாயும், கோசாலை உண்டியலில் 35 ஆயிரத்து 907 ரூபாயும், யானை பராமரிப்பு 8 ஆயிரத்து 934 ரூபாயும், அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 891 ரூபாயும், மேலக்கொவில் அன்னதான உண்டியலில் 2 ஆயிரத்து 557 ரூபாயும், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் 3 ஆயிரத்து 233 ரூபாய் கிடந்து இருந்தது. தங்கம் 381 கிராமும், வெள்ளி 3,308 கிராம் கிடைத்து உள்ளது.மொத்தம் 95 லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாயும், 886 கிராம் தங்கமும், 6 ஆயிரத்து 628 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உண்டியல் வசூல் ரூ. 53 லட்சத்து 81 ஆயிரத்து 938 கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத உண்டியல் வசூல் 95 லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாய் கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத உண்டியல் வசூலை விட ரூ 41 லட்சத்து 79 ஆயிரத்து 49 அதிகம் கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar