Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரவில் தடை.. காலையில் அனுமதி: மன்னர் ... சின்னாளப்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்ப பூஜை சின்னாளப்பட்டி சமயபுரம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது; உயர் நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது; உயர் நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

10 டிச
2022
09:12

மதுரை: திருவிழா உட்பட எந்த நேரத்திலும் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்திற்குள் யாரையும் தங்க அனுமதிக்க மாட்டோம் என, நிர்வாகம் உறுதியளித்த அதே நிலையை பராமரிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சித்ராங்கதன் தாக்கல் செய்த பொது நல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின்போது பக்தர்கள் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பர். தற்போது, கந்த சஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோவில் உள் பிரகாரத்திற்குள் தங்கி, பூஜை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, சட்டவிரோதம். கந்த சஷ்டியின்போது கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள அனுமதி கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: காலத்தின் சோதனைகளைத் தாங்கி நிற்கும் கோவில்கள் தொல்லியல் அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். ஏனெனில் அவை அசாதாரணமான திறமையுடன் கட்டப்பட்டுள்ளன. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை பலமடங்கு அதிகரிக்கிறது. இங்கு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, கோவிலின் புனிதத்தை பேண வேண்டியுள்ளது. விரதம் மற்றும் இதர மத நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் எந்த ஒரு பக்தரும் திருவிழா அல்லது வேறு நாட்களில் கோவிலின் உட்பிரகாரத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அது நியாயமானது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. கோவில் நிர்வாகம் உறுதியளித்ததை இந்த நீதிமன்றம் பதிவு செய்கிறது. அதே நிலையை பராமரிக்குமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. கோவில் வளர்ச்சிப் பணிக்காக அரசு ஒதுக்கிய 300 கோடி ரூபாயை நியாயமாக பயன்படுத்தி, முடிந்தவரை விரைவாக முடிக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar