Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா மேரு சக்ர பகவதி அம்மன் கோயிலில் ... திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரத்தில் சோமவார 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிவாலயபுரத்தில் சோமவார 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 டிச
2022
07:12

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத,  நான்காவது சோமவார சங்காபிஷேகம் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு, சங்கரலிங்கம் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர், ராமேஸ்வரம் கோடி தீர்த்தம், திருச்சி காவிரி தீர்த்தம், அழகர்கோயில் நூபுர கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, 108 சங்குகளில் நிரப்பப் பெற்று, கும்பம் வைத்து,  யாகசாலை  அக்னி ஹோமம்  நடைபெற்று அபிக்ஷேக ஆராதனைகளுடன் , 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இன்றைய இறைப் பணியில்  கர்நாடக மாநிலம் பெங்களூரை  சேர்ந்த சிவ.A. சுந்தரமுருகேசன் - சிவ.S. முருகேஸ்வரி, டாக்டர்.சிவ.S.சிவானந்த்,  சிவ.ரூபாஸ்ரீ குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், சுண்டல்,  அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை ... மேலும்
 
temple news
பேரூர் : பேரூர் நொய்யல் படித்துறையில் மகாளய அமாவாசை வழிபாடு இன்று அக் 2 நடந்தது. இதில், திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar