Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமணீஸ்வரர் கோவிலில் தேய்பிறை பஞ்சமி ... நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.12.54 லட்சம் காணிக்கை நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் 28ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் 28ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

14 டிச
2022
02:12

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜன., 6ல், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

உலகப் புகழ்பெற்ற கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய இருதிருவிழாக்கள் பிரசித்தி பெற்றதாகும். மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம், வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 29ம் தேதி துவங்கி, ஜனவரி 4ம் தேதி வரை, தினசரி சுவாமி வீதியுலா நடக்கிறது. தேர்த்திருவிழா ஜனவரி 5ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு, ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சுவாமிக்கு ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது. ஜனவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், காலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை, சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மஹாபிஷேகம் நடக்கிறது. பின், காலை 10:00 மணிக்கு, சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலாவுக்கு பின், பகல் 2:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. ஜனவரி 7ம் தேதி, பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவோடு ஆருத்ரா தரிசன உற்சவம் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். விழா நடைபெறும் 10 நாட்களும் மாலை 6:00 மணிக்கு, சாயரட்சை பூஜையில் சித்சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து, திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar