திருமலை எங்கும் திடீர் அருவிகள், மூடு பனி : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2022 08:12
திருப்பதி: மாண்டோஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை திருமலையின் அழகை மெருகேற்றியுள்ளது. திருப்பதி அடிவாரதத்தில் இருந்து திருமலை நோக்கி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் திடீர் திடீர் என தோன்றியுள்ள நீரோடைகள், சிற்றருவிகள்,மூடு பனி போன்றவைகளின் அழகை ரசித்தவண்ணம் செல்கின்றனர்.
மலையின் மீது கிட்டத்தட்ட 219 மிமீ மழை பதிவாகியிருந்தாலும் இந்த மழை யாரையும் பாதிக்கவில்லை சீரான வேகத்தில் பெய்து முடித்துள்ளது மழை நீரால் மழையில் உள்ள அணைகள் யாவும் நிரம்பிவருகிறது. வளைந்து நெழிந்து செல்லும் மலைப்பாதைகளிலும் ஆங்காங்கே தோன்றியுள்ள நீரோடைகள் கண்களை வசீகரிக்கின்றன.வாகனத்தில் செல்பவர்களுக்கு இது சந்தோஷத்தைதரும் அனுபவமாக மாறிப்போயுள்ளது. மலை மீது சூழ்ந்துள்ள மூடுபனி அவ்வப்போது விலகும் போது மின்னுவது போல தெரியும் மூலவரின் தங்க விமான தரிசனம் பக்தர்களுக்கு பரவத்தை ஏற்படுத்தி வருகிறது.