திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் விமான பாலாலயம்நடந்தது. நெல்லை ஜங்ஷன் பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான திருப்பணி வேலைகள் துவங்கவுள்ளது. திருப்பணி வேலைகள் துவங்குவதற்கு முன்னோடியாக விமான பாலாலயம் பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. ஹோமம், கும்பபூஜைகள், யாகசாலைபூஜைகள் நடந்தது. மூலஸ்தான விமானம், சண்முகர் விமானம்மற்றும்பரிவார மூர்த்திகள் விமானத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.