பதிவு செய்த நாள்
15
டிச
2022
11:12
நாகர்கோவில்: நாகர்கோவில் பள்ளிவிளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை மா த சிறப்பு கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி உஷபூஜை , கொடிமர சிறப்பு பூஜை , சாஸ்தா மற்றும் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து முத்தாரம்மனுக்கு அலங்கார சிறப்பு பூஜை , தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கால சுவாமி, சுடலைமாடசுவாமி, வாதை சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இரவு புதிதாக சக்கரம் அமைக்கப்பட்ட முத்தாரம்மன் ரத (வெள்ளோட்டம்) பவனி நடைபெற்றது. ரத வெள்ளோட்டத்தை நாகர்கோவில் எம்எல்ஏ., எம்.ஆர். காந்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஐயப்பா சேவா சங்க மா வட்ட அமைப்பாளர் ராஜா, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பள்ளிவிளை ஊர் தலைவர் சிவசங்கரன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.