கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் உற்சவர் விக்ரகம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2022 11:12
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் சுவாமிகள் கோவிலில் உற்சவர் விக்ரகம் இன்று பிராண பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் சுவாமிகள் கோவிலில் உற்சவர் விக்ரகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பக்தர்கள் அளித்த நன்கொடை உதவியுடன், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒன்றரை அடி உயரத்தில் பஞ்சலோக உற்சவர் விக்ரகம், சுவாமி மலையில் வடிவமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து உற்சவர் விக்ரகம், கூத்தப்பாக்கம் கோவிலுக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இன்று 15ம் தேதி காலை 9:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, உற்சவர் விக்ரகம் பிராண பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.