மேலுர்: மேலுார், பேங்க்ரோட்டில் கழுங்கடி பெரியகருப்பணசாமி, நொண்டிச்சாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிச .13 யாகசாலை பூஜைகள் துவங்கியது. இரண்டாம்கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.