வேம்பத்தூரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்டிக்காளி கோயில் வீடு கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2022 10:12
மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்தூரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்டி காளியம்மன் கோயில் வீடு கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே வேம்பத்தூரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்டி காளியம்மன் கோயில் வீடு சேதமடைந்ததை தொடர்ந்து அக்கோயில் குடிமக்கள் சில வருடங்களாக திருப்பணிகள் செய்து வந்தனர்.இந்நிலையில் இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்காக அதிகாலை ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பெட்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேக்கு மர பெட்டிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.இந்த விழாவில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.