சாயல்குடி: சாயல்குடி அருகே கீழச்செல்வனூரில் உள்ள பூரண புஷ்கலா பொற்கொடி அம்பிகை சமேத பிரம்மாண்ட அய்யனார் காமாட்சி அம்மன் கோயிலில் மகா சண்டி ஹோம வேள்வி நடந்தது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் வேதிகார்ச்சனை, நவகிரக ஹோமம், தீபாரதனை உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 11:00 மணியளவில் விக்னேஸ்வர, தீபலட்சுமி, சுமங்கலி, கன்னிகா பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு யாக வேள்வியில் பூர்ணாகுதி நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.