ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: 22ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 08:12
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வரும் 22.12.2022 முதல் 12.01.2023 வரை திருஅத்யயன பெருவிழா எனப்படும் வைகுந்த ஏகாதசி பெருவிழா நடைபெற உள்ளது. இருபத்தி இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருநாட்களில் முதல் பத்து நாள் ஆழ்வார் அருளிச் செய்த திருமொழிகளும், வைகுந்த ஏகாதசி அன்று ரத்னாங்கி சேவையும், பின் வரும் பத்து நாட்கள் திருவாய்மொழியும் அரையர்களால் பாராயணம் செய்யப்படும். இந்த 20 நாட்கள் மூலவர் அரங்கநாதர் முத்தங்கி வஸ்த்திரத்தில் சேவை சாதிப்பார்..
வைகுந்த ஏகாதசி விழா:
22.12.2022 - வியாழன் - திருநெடுந்தாண்டகம் 23.12.2022 - வெள்ளி - பகல்பத்து ஆரம்பம் 01.01.2023 - ஞாயிறு - நாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்) 02.01.2023 - திங்கள் - வைகுந்த ஏகாதசி - பரமபதவாசல் திறப்பு நேரம் காலை - 4.45 மணி 08.01.2023 - ஞாயிறு - திருக்கைத்தல சேவை 09.01.2023 - திங்கள் - திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் 10.01.2023 - செவ்வாய் - தீர்த்தவாரி 11.01.2023 - புதன் - ஸ்ரீ நம்மாழ்வார் மோட்சம்.