மார்கழி முதல் தேதி.. பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 08:12
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மார்கழி முதல் தேதியான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம், திருமலை நாயக்கன் பாளையம், நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், பாலமலை ரங்கநாதர் கோவில், சின்னதடாகம் கரி வரதராஜ பெருமாள் கோவில், புதுப்புது ஆதிமூர்த்தி பெருமாள் கோவில், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் அதிகாலை, 4:30 மணிக்கு அபிஷேகம், 5:30 மணிக்கு திருப்பாவை சேவித்தல், 6:00 மணிக்கு சாற்றுமுறை பூஜை நடைபெற்றது. மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.