Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி பிறப்பு: வெள்ளி கவச ... மேலுார் சிவன் கோயிலில் அஷ்டமி சப்ர விழா மேலுார் சிவன் கோயிலில் அஷ்டமி சப்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபால்பட்டி அருகே 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கோபால்பட்டி அருகே 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 டிச
2022
11:12

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாட அமைப்பிற்குள் நாயக்கர் காலத்து கணவன்,மனைவி நடுகல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நத்தம் அருகே கோபால்பட்டி பகுதியில் திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழு வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோபால்பட்டியிலிருந்து வி.மேட்டுப்பட்டி செல்லும் சாலையின் குளக்கரையில் மாட அமைப்பிற்குள் உள்ள 17-ம் நூற்றாண்டு கணவன் மனைவி நடுகல்லை கண்டுபிடித்தனர். மேலும் ஆய்வு அறிக்கையில் அவர்கள் கூறியதாவது நடுகல் பாதுகாப்பாக மாட அமைப்பிற்குள் உள்ளது. மேலும் நடுகல்லின் இடது புறம் ஆண் சிற்பத்தில் தலையில் அள்ளி முடிந்து சவுரி கொண்டையும், அக்கொண்டை முடிச்சில் தொங்கும் குஞ்சமும், ஆணின் காதில் வளை குண்டலமும், இரு கரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையும், இடையில் வாள் இடைவாரிலிருந்து நீண்டு தொங்குகிறது. இடுப்பில் இடை கச்சை ஆடை, தார் பாச்சி கட்டிய அமைப்பும் அதிலிருந்து கெண்டை கால் வரை மூடிய நிலையில் இடை கச்சை ஆடையுள்ளது.

பெண் சிற்பத்தில் கொண்டை வலது புறமும், காதில் வளைகுண்டலமும், நெஞ்சில் ஆரமும், மார்பில் கச்சையும், இடது கை தொங்கு கரம் (டோலி முத்திரையும்), வலது கரம் இடுப்பில் வைத்தபடியும், இடை ஆடை இடுப்பில் சுற்றி கெண்டை கால் வரை நீண்டுள்ளது. ஆடை அமைப்பில் கொண்டை அமைப்பில் இந்நடுகல் 17-ம் நூற்றாண்டில் கணவன், மனைவி நடுகல் ஆகும். இவர் இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்திருப்பார் எனக் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar