ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் உண்டியல்கள் எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 01:12
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நேற்று 15ம் தேதி காலை திருக்கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து அவர்கள் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை உதவி ஆணையர் ஆர்.ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி, ஆய்வாளர் சு.பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வ தொண்டர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர். ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 15.12.2022 காலை மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டதில் ரூபாய் 48,29,243 ரொக்கமும் தங்கம் 70 கிராம், வெள்ளி 465 கிராமும் மற்றும் 251 எண்ணிக்கை வெளிநாட்டு ரூபாய் தாள்களும் வரப் பெற்றது.