பதிவு செய்த நாள்
16
டிச
2022
02:12
வந்தவாசி: மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் அவதார தலமான, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழூரில், ஆராதனை விழா நடக்க உள்ளது.
மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் அவதார ஸ்தலமான, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்திலுள்ள ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகளின் மணிமண்டபத்தில், மகானின் ஆராதனை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, நாளை, 17ம் தேதி காலை, 6:00 மணிக்கு மகானின் விஸ்வரூப தரிசனம், ஹாரத்தி, 6:30 மணிக்கு நித்ய அபிஷேக ஆராதனை, காலை, 7:00 மணிக்கு, சிதம்பரம் ஸ்ரீ தியாகப்பா தீஷிதர் மற்றும் குழுவினரின் சதுர்வேத பாராயணம், நண்பகல், 11:00 மணிக்கு, காமகோடி வம்சத்தில் உதித்த காமாஷி ஸ்வரூபம், மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளுக்கு, மூக பஞ்ச ஸதி பாராயணத்துடன் கூடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, நண்பகல், 1:00 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு விபூதி காப்பலங்காரம், தொடர்ந்து பிரசாதம் வினியோகம் நடக்க உள்ளது. அன்றிரவு, 9:00 மணி வரை மகானின் நடை திறக்கப்பட்டு, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், உபயதாரர்கள் மற்றும் விபரங்கள் குறித்து, மஹாலஷ்மி சுப்பிரமணியன் மற்றும் பட்டாபிராமன், ஆகியோரை, 99620 19172 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.