பதிவு செய்த நாள்
16
டிச
2022
02:12
பழநி: பழநி மலை கோயிலில் இன்று (டிச.16) முதல் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற உள்ளது.
பழநி மலைக்கோயிலில் இன்று (டிச.16.,) மார்கழி மாதம் துவங்குவதை முன்னிட்டு அதிகாலையில் 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற உள்ளன. மார்கழி மாதம் துவங்கும் இன்று (டிச.,16) முதல் 2023, ஜன.,15, வரை திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். மேலும் (2023, ஜன.,16) தை ஒன்று முதல் தை 5 ஆம் தேதி வரை அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 4:30 மணிக்கு விளாபூஜை நடைபெறும். மேலும் 2023, ஜன.,20 முதல் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்படும். இன்று (டிச., 16) முதல் எதிர்வரும் 2023, ஜன.,19 வரை வினச் மற்றும் படிப்பாதையில் அதிகாலை 3:30 மணி முதல், பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.