அலகு மலையில் தைப்பூசத் திருவிழா தேர் முகூர்த்த கால் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 02:12
பொங்கலூர்: பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் பூஜை நடந்தது.
திருப்பூருக்கு மிக அருகில் உள்ள மலைக்கோவிலான அலகுமலை தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடைபெறும். கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத முகூர்த்த காலில் புனித நீர் தெளித்து பூமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தேருக்கு முகூர்த்த கால் நட்டு பூஜை செய்யப்பட்டது. வரும் ஜனவரி, 29 அம்மன் தேரோட்டம், பிப்ரவரி, 5 ல் பாலதண்டாயுதபாணி தேரோட்டம் நடக்கிறது.