ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2022 09:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். நேற்று அஷ்டமி பூப்பிரதஷ்ணம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் வீதி உலா சென்றதும் நடை சாத்தப்பட்டு, மதியம் 12 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இதனால் மதியம் 12 மணி முதல் கோயில் கிழக்கு வாசல் நுழைவில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது வெயில் சுட்டெரித்ததால் வெப்ப சலனம் பக்தர்களை வாட்டியது. இதில் குழந்தைகள் வயது மூத்த பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின் மதியம் 1: 20 மணிக்கு நடை திறந்தனர். நிழல் பந்தல் நோ : நவம்பரில் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2 கோடியை தாண்டிய நிலையில், ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருவாயை அதிகரிக்க கங்கணம் கட்டும் கோயில் அதிகாரிகள், சுட்டெரிக்கும் வெயிலில் வாடும் பக்தர்களுக்கு நிழல் தரும் பந்தல் அமைக்க முன் வராதது ஏன் ?. கோயில் வருவாயை அதிகரிக்கும் பக்தர்களுக்கு சுட்டெரிக்கும் வெயில், கூட்ட நெரிசலால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.