ஸ்ரீரங்கம் : திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ வைகுந்த ஏகாதசி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார். இ.ஆ.ப., , மாநகர காவல் ஆணையர் திரு.க.கார்த்திகேயன் ஆகியோர் நேற்று ( 16.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் திரு.செல்வராஜ், , ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு. செ.மாரிமுத்து, மாநகர துணை ஆணையர்கள் திரு.அன்பு, திருமதி.ஸ்ரீதேவி, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் திருமதி.கு.அனுசியா, மண்டலத் தலைவர் திருமதி. ஆண்டாள் ராம்குமார்,, உதவி ஆணையர் திரு.ரவி உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் இருந்தனர்.